Tuesday, January 12, 2010

கற்பழிப்பு - இது உங்களின் தவறு அல்ல !!! - பகுதி 1


கற்பழிப்பு என்றால் என்ன?

கற்பழிப்பு என்பது உடலுறவு சம்பந்தப்பட்ட ஒரு வன்முறை குற்றமாகும். உங்களுக்கு உடன்பாடில்லாமல், விருப்பமில்லாமல் உங்களது மர்ம உறுப்பில் ஓர் ஆண் தன்னுடைய மர்ம நுழைப்பதே கற்பழிப்பு என சட்டம் சொல்கிறது. நீங்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்களாயின், உங்கள் விருப்பத்தோடு அல்லது விருப்பமின்மையோடு எந்ததொரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்தாலும் அது குற்றமே என சட்டம் சொல்கிறது.


பாலியல் வன்முறையோடு சம்பந்தப்பட்ட இதர குற்றங்கள்

மனிதத் தன்மைக்கு முரணாக ஒருவரை வற்புறுத்தி அவரது வாயில், மர்ம உறுப்பில் அல்லது ஆசன வாயில் எந்ததொரு பொருளையும் வலுக்கட்டாயமாக நுழைப்பது, உங்களை மனதளவில் அதிகமாக பாதித்தாலும், அது சட்டப்படி கற்பழிப்பு குற்றமாகாது. இம்மாதிரியான காரியங்கள் பாலியல் பலாத்காரங்கள், பண்பை மீறுதல், மனிதத் தன்மைக்கு முரணான உடலுறவு, கற்பழிப்பு முயற்சி போன்ற குற்றங்களின் கீழ்வரையறுக்கப்படலாம்.

கற்பழிப்பு என்பது .....
  • உடலுறவு அல்ல. அது ஒரு வன்முறை. கற்பழிக்கிறவன் தன் எண்ணம் ஈடேர கடுமையும், வன்முறையும் பயன்படுத்துவான். உடலுறவு உங்கள் சுய மரியாதையைக் குலைக்க ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும். உங்களை வேதனைப் படுத்தவும், சுய கௌரவத்தைக் குலைக்கவும் கோபத்தோடு கூடிய வன்முறையில் பாதிப்புக்குள்ளாக்குவதே கற்பழிப்பு எனப்படுகிறது.
  • இது உங்களின் தவறு அல்ல. உங்கள் விருப்பத்தின் பேரில் கற்பழிப்பு நடைபெறுவதில்லை. நீங்கள் கவர்ச்சியாக உடையணிவதும், செயல்படுவதும் உங்களை நீங்களே கற்பழிப்புக்குத் தாரை வார்க்கிறீர்கள் என்று பொருளாகாது. ஓர் ஆண் ஒருப் பெண்ணைக் கற்பழிப்பதற்கு அப்பெண்ணின் நடவடிக்கைகள் தான் வாய்ப்பும் உரிமையும் கொடுக்கின்றன என பொருள்படாது.
  • கற்பழிப்பு தெரியாத அறியப்படாத நபரால் தான் நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தங்களை கற்பழித்தவனை நன்கு அறிந்திருக்கின்றனர். கற்பழிப்பவன் உங்கள் நண்பராக, அயலானாக , காதலனாக, ஏன் உங்கள் குடும்ப உறுப்பினராக அல்லது சொந்த பந்தங்களில் ஒருவனாகக் கூட இருக்கலாம்.

No comments:

Post a Comment