Sunday, January 10, 2010

கனவான எதிர்ப்பார்ப்புகள் - பகுதி 2

தான் எதிர்ப்பார்க்காத ஒன்று அங்கே நிகழப் போவதை அறியாத ரேவதியும் மற்றவர்களும் அவருடன் சென்றனர். அங்கே அவர்கள் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. களைப்பாக வந்த அனைவருக்கும் உணவு பறிமாறப்பட்டது. பிறகு அவர்கள் அனைவரும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு தத்தம் ஏஜண்டுகளுடன் அனுப்பப்பட்டனர். இதன் பிறகு நாம் வீட்டு வேலைக்கு அனுப்பப்படுவோம்; நன்றாக வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும்; பணம் சேர்த்து குடும்ப கஷ்டத்தை போக்க வேண்டும் என பல்வேறான கற்பனைகளுடன் பயணம் செய்தாள் ரேவதி. 30 நிமிட பயணத்திற்கு பிறகு, அவர்களை ஏற்றி வந்த கார் ஒரு தங்கும் விடுதியின் முன் நின்றது. அங்கே சில இளம் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்து, மோட்டார் சைக்களில் அமர்ந்து இருக்கும் வாலிபர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். சகிக்க முடியாத சில காட்சிகளும் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தனர். இங்கேவா நாம் வேலை செய்ய போகிறோம் என ரேவதி யோசித்து கொண்டிருக்கும் போது " ம்ம் .. யோசித்தது போதும்; சீக்கரம் இறங்குங்கள் " என அந்த ஏஜண்டு அவசரப்படுத்தினார்.

No comments:

Post a Comment