Monday, November 23, 2009

பெண்கள் உரிமையையும் ஜனநாயகத்தையும் முன் நிறுத்துதல்

இந்த உலகமயமாகும் சகாப்தத்தில் மேம்பாடு ஒரு சிலருக்கு வலுவானதொரு வருமானத்தை ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் பரந்ததொன்றாக இருக்க வேண்டும். அதாவது , நியாயமான கொள்கைகளையும் சமத்துவமிக்க ஜனநாயகத்தையும் , பொது விவகாரங்களில் பிரஜைகள் குரல் எழுப்பும் சந்தர்ப்பத்தையும் போட்டியிடும் உரிமையையும் , பொறுப்புள்ள அரசாங்கத்தைத் தேர்வு செய்யவும் கண்காணிக்கவும் சுதந்திரம் வழங்க வேண்டும்.


பெண்கள் மனித உரிமைத் திட்டம்

உலக மக்கள் தொகையில் பாதி பெண்களாவர். இருந்தும் இவர்களின் உரிமைகள் பொதுவாக கவனிக்கப்படாமல் பலமுறை வரையறுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் என்பது ஆண்களுக்குள்ள அதே உரிமைகள் தான் என கற்பனை செய்யப்படுகின்றன . இது அடிக்கடி சமத்துவமில்லாத பாதகமான நடைமுறைகளுக்குத் தான் இட்டு செல்கின்றன. உடல் அமைப்பு வித்தியாசங்களாலும் , பொறுப்புகளாலும் பெண்கள் அந்தஸ்து குறித்த ஒரு தலை பட்சமான கருத்துக்களாலும் , பொறுப்புகளாலும் , ஆண்களை விட பெண்களுக்கு மாறுபட்ட வாழ்க்கை கதைகளும் அனுபவங்களும் உள்ளன . இதனால் ஒரு பெண்கள் உரிமைத் திட்டத்திற்கான குறிப்பிட்ட தேவை உள்ளது .


பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாதகங்களையும் களைவது மீதான ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் பெண்களின் உரிமைகளுக்கான ஒரு விரிவான திட்டத்தை வழங்கியுள்ளது .

சரத்து 1 இன் படி பாதகங்கள் என்பது :-

.வேண்டுமென்றோ அல்லது மறைமுகமாகவோ புரியப்படுபவைகள் ; உதாரணத்திற்கு ,ஆணும் /பெண்ணும் சமம் என பாவிக்கும் சட்டங்களின் முடிவுகளையும் உள்ளடக்கும் .

.பெண்களுக்கு எதிரான எந்த ஒரு பாதக சூழ் நிலையையும் மதிப்பிடும் ஒரு முறையை வழங்குதல் .

.புதிதாகத் தோன்றும் பிரச்கனைகள் இந்த ஒப்பந்தத்தின் பகுதியில் தெளிவாக குறிப்பிட வில்லை .(உதாரணம் ,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் )

சமத்துவத்தை உறுதிப் படுத்தும் குறிப்பாக பெண்களின் உரிமைகளைப் பாதுக்காக்கும் சாதகமான சட்டங்களையும் கொள்கைகளையும் அமுலுக்குக் கொண்டுவரும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை கொள்கை வலியுறுத்துகின்றது .

மலேசிய அரசாங்கம் உடன்பாடான நடவடிக்கைகளை எடுத்துள்ளது தெரிந்ததாகும் . அவற்றில் இவைகள் இணைக்கப்பட்டுள்ளன :

.1989 இல் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் மீதிலான தேசிய கொள்கைகயும் 1997 ஆம்
ஆண்டு செயல்திட்ட அமலாக்கமும்
.மகளிர் அமைச்சு ,(பிறகு மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சு என மாற்றம் கண்டது .(தற்போது, மகளிர்,குடும்ப ,சமுக மேம்பாட்டு அமைச்சு என அழைக்கப்படுகிறது ) 2001 இல் அமைக்கபட்டது .

. 2001ல் கூட்டரசு சட்டதிட்டங்களில் சரத்து 8(2)இன் திருத்தத்தில் பாதகங்களை தடைசெய்யும் தலமாக ஆண்/பெண் சமநிலை இணைக்கப்பட்டுள்ளது .

இருப்பினும் பாதகமான சட்டங்கள் தொடர்ந்து அமுலில் உள்ளன .அதோடு வழக்கமான சமத்துவம் அளித்தலுக்கும் பெண்கள் அனுபவிக்கும் உண்மையான உரிமைகளுக்கும் இடையே இடைவெளிகளும் உள்ளன .


பிரச்சனைகள்

.பொதுவாக ,தீவிரவாத செயல்கள் என்னற்ற அடக்குமுறைச் சட்டங்களால் அடக்கப்படுகின்றன .இவை அடிப்படை உரிமை வாழ்வைத் தடை செய்கிறது . உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் ,அச்சக பிரசுர சட்டம் ,பொது ஒழுங்கும் அவசர கால சட்டமும் இவற்றில் அடங்கும் .

.கூட்டரசு அரசியல் சாசனம் திருத்தப்பட்டிறுப்பினும் முரண்பாடாகவும் பகிரங்கமாகவும் பெண்களுக்கெதிரான பாதகங்கள் இன்னும் நடைப்பெறுகின்றன. உதாரணத்திற்கு பகுதி 3 , சரத்து 15(1) ஒரு மலேசிய ஆண்மகன் ஒரு வெளிநாட்டு பெண்ணை மணந்து கொண்டால் அவன் மகன் மலேசியாவுக்கு வெளியே பிறந்தாலும் கூட தன் நட்டு பிரஜையாக முடியும் என குறிப்பிட்டுள்ளது .ஆனால் பெண்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது .

.இஸ்லாமிய குடும்ப சட்டம் (கூட்டரசு பிரதேசம் ) (திருத்தம் ) 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது .மசோதாவில் பாதகமான திருத்தங்கள் உள்ளன .பகுதி 23(3) லும் 24(4) (௮ )விழும் ஆண்கள் எளிதாக பலதரங்களை கொண்டிருக்க உதவுகின்றன .பகுதி 23 (9) (௮ ) ஒரு கணவன் பலதார திருமணம் செய்துகொள்ளும்போது ஒரு மாணவி ஜீவனாம்சம் பெறுவதையோ அல்லது சொத்து பிரிப்பதையோ தேர்வு செய்ய வற்புறுத்தப்படுகிறாள் .

.வழக்குமன்றத்தின் இரட்டை சட்டப்பூர்வ முறை சொந்த விசயங்களில் முஸ்லிம்களுக்கும் முஸ்லீம் அல்லதவர்கலுக்குமிடையே வேறுப்படுகின்றன.ஒரு வாழ்க்கைத்துணை மதம் மாறிய சூழ்நிலையில் பிள்ளைகள் பராமரிப்பு ,மதம் சொத்துரிமை பாதிக்கப்படுகின்றன .

.பெண்களுக்கெதிரான வன்முறைகளிலிருந்து பாதுக்கக்கும் சட்டங்கள் குறிப்பாக பலாத்காரம் ,வீட்டு வன்முறைகள் ,பாலியல் தொல்லைகள் போன்ற விவகாரங்களில் தொடர்ந்து அதிருப்தியளிக்கின்றன

.பொது சேவையில் முடிவெடுக்கும் பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை அரசாங்கத்தின் இலக்கான குறைந்த பட்ச 30%க்கும் குறைவாகவேயுள்ளது


மலேசிய அரசாங்கத்தின் கடமை
பெண்களின் உரிமைகளை சக்தி வாய்ந்த அமலாக்கத்திர்க்குத் தடையாக இல்லாமல் சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டுகோள் விடுக்கின்றது .மலேசிய அரசாங்கம் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,செனட்டர்கள் இந்த முக்கிய விவகாரங்களில் பங்காற்ற முடியும் .

.கொள்கை அளவிலும் செயலாக்கத்திலும் பெண்கள் உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் ஒத்துழைத்தல் .

.இந்த பிரச்சனைகளையும் பரிந்துரைகளையும் தங்களது தேர்தல் அறிக்கையிலும் தொகுதி நிகழ்ச்சிகளிலும் இணைதல்

.பெண்கள் உரிமைகள் அமலாக்கத்திலும் ஜனநாயக செயலாக்கத்திலும் மேம்பாட்டையும் இடைவெளிகளையும் கண்காணித்தல்.

No comments:

Post a Comment