Friday, November 20, 2009

பெண்களும் தகவல் சுதந்திரமும்

அறிவு என்பது சக்தியாகும். தகவலைப் பெறுதல் அறிவை திறக்கும் சாவியாகும். தகவல் சுதந்திரமில்லாவிட்டால் மக்களின் வாழ்க்கைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அவர்கள் மிகக் குறைவாகவே குரல் கொடுக்க முடியும். அவர்களுக்குத் தெரிவதற்கு முன் பெட்ரோலுக்கு 30 சென் அதிகமாகவே அல்லது சாலை வரி அதிகரிப்போ இவர்களிடம் கலந்தாலோசிக்காமலேயே எடுக்கப்பட்டுள்ளதை அறிவார்கள். அவர்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

தகவல்கள் தடையின்றி கிடைக்கவிட்டால், அரசுகளும் கம்பெனிகளும் தங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்பது கஷ்டமாகும். இதன் விளைவாக இந்நிறுவனங்கள் தண்டனைகளின்றி தவறு செய்ய எதுவாக இருக்கும். சரியான தகவல்கள் இல்லையென்றால் பெண்கள் உட்பட மக்கள் தங்களுக்கென உண்மையறிந்து தேர்வுகளைச் செய்ய இயலாது.

முக்கிய பிரச்சனைகள்

  1. தகவல் சுதந்திரத்துக்கு பொதுவான தடைகள் .
  • அடக்கு முறைச் சட்டங்களின் பயன்பாடு .

அச்சக பிரசுர சட்டம் 1984 , போன்ற அடக்குமுறைச் சட்டங்களில் பயன்பாடு. சமீபத்தில் 'சைனா பிரஸ் ''மூத்த ஆசிரியர்கள் இருவருக்கெதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. ஒரு வீடியோ காட்சியில் நிர்வாணமாகத் தோப்புகரணம் போடுவது ஒரு சீன நாட்டு பெண் எனத் தவறாக செய்தி வெளியிட்டதற்காக ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டன.

  • பொறுப்புடமையின்மையும் ஒளிவுமறைவின்மையும்

உள்நாட்டு அரசுகள் எவ்வாறு நிதியை செலவிடுகிறது என்பது குறித்து ஒளிவு மறைவின்றி வெளியிடும் பொறுப்புடைமை. (எட்ஜ் மலேசியா பத்திரிகையில் உள்நாட்டு சக்தி 22 டிசம்பர் 2003 )உள்நாட்டு அரசாங்கம் சிவி 13 மில் லியன் ஆண்டு வரவு செலவு கணக்கை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து தகவல் பொது மக்களுக்குத் தெரியது. அது எப்படி செலவிடப்பட்டது குறித்து அவர்கள் ஒன்றும் கருத்துரைக்க முடியாது.

  • திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய சட்டம் குறித்து போதிய தகவலின்மை .

இச்சட்டங்கள் அடிக்கடி மிக விரைவாக நாடாளமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த மசோதாவைப் பற்றி விவாதித்து தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பு பொது மக்களுக்கு மறுக்கப்படுகிறது. இதனால் மலேசியா குடிமக்களின் ஜனநாயக பங்ககெடுப்பு உரிமை குறைக்கப்படுகின்றது.

  • தகவல் சாதனைங்கள் அடக்குமுறைச் சட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அரசாங்கம் பத்திரிகை ஆசிரியருக்குரிய கொள்ளைகள் மீது அதிகாரம் செலுத்துகிறது. அடிக்கடி தணிக்கைக்கும் உள்ளாகின்றது. சிறப்பாக தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கிட கஷ்டமாகிறது. மிகக் கடுமையாக சூழ்நிலையில் அச்சக பிரசுர சட்டம் 1984 யைப் பயன்படுத்தி பத்திரிகையோ நிறுத்தி முடியும்.

. கல்வி சார்ந்த சுதந்திரமின்மையும் அடக்குமுரைச்சுழலும்

பல்கலைக்கழகங்களிலும் , பல்கலைக்கழகங்கள் வழியும் , பல்கலைக்கழக கல்லூரி சட்டம் 1971 வழியும் ஒப்பந்தமும் தகவல் வழங்குதளுக்கும் பெறுதலுக்கும் தடையாக உள்ளன.


2 பெண்கள் தகவல்கள் பெற மேலும் தடைகள்

. கடனுதவியும் மற்ற உதவி வசதிகளும் இருந்தும் , சொந்தத் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இப்படியான உதவிகள் இருப்பதே அல்லது இவற்றை எப்படி பெறுவது என்றே தெரியாமல் இருக்கின்றன .

. 4 மில்லியன் கிராமப்புற பெண்கள் கல் வியின்மையிலும் வறுமையிலும் இருப்பதால் அரசுக் கொள்ளைகள் , திட்டங்கள் , நிகழ்சிகள் வசதிகளினால் நன்மையடைவது கஷ்டமாகயுள்ளன . (மகளிர் , குடும்ப மேன்பாடு அமைச்சு ,2003)

. 52% பெண்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் . ஆனால் பெரும்பாலோருக்கு தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளர்கள் குறித்து அதிகம் எதுவும் தெரியாது . இம்மாதிரியான தகவல்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன . தகவல் சாதனங்களில் எளிதாகவும் கிடைக்காது . ஆண்களை போல் அதே வாய்ப்புகள் இருத்தும் பெண்களுக்கு இத்தகவல் மற்ற இடங்களிருந்து கிடைப்பதில்லை .[எ.கா அரசியல் கூட்டங்கள்]. [மலேசியா அரசு சார்பற்ற அமைப்பான பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாதங்கள் மீதான மாநாடு ]

. முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம் இருப்பதால் சட்டம் மீதான தகவல்கள் , கொள்ளைகள் , திட்டங்கள் , நிகழ்சிகள் மற்ற பெண்களுக்கு குறைவாகவே சென்றடைகின்றன .

. அடிப்படை தொடர்பு சாதனமின்மை , தகவல் தொடர்பு சாதனத் துறைக்கு செலுத்தும் அதிகமான கட்டணம் , பழக்கமில்லாத தகவல் தொடர்பு சாதனத்துறை , இணைய பயன்பாட்டில் ஆங்கில ஆதிக்கம் , குறைந்தளவு கல் வியறிவு , கணினித் துறையில் பயிற்சி பெறும் வாயிப்பின்மையும் மேலும் பெண்கள் தகவல் பெறக் கஷ்டமாக உள்ளது .

. பெண்கள் சட்ட புறக்கணிப்புக்கு காட்டுப்பாட்டிற்கும் ஆளாகுவதால் இவர்களின் நடவடிக்கைகள் அடக்கபடுகின்றன . இவர்களின் சட்ட உரிமைப் பற்றியும் குறைவாக தெரிந்திருக்கின்றனர்.

. ஆண் /பெண் சமத்துவம் குறித்து சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லாமை பெண்அரசியல்வாதிகள் ஆண் /பெண் சமத்துவ வரவுசெலவு பட்டியலையும் பெண்களுக்கு நன்கு உதவக்கூடிய நிகழ்ச்சிகளையும் ஆதரிக்கத் தடையாக உள்ளது .

.தொடர்புசாதனங்கள் அடிக்கடி பெண்களை கருவிகளாகவும் பாரம்பரிய பாத்திரங்களிளுமே விவரிக்கின்றன .

3.நீங்கள் என்ன செய்யலாம் ?

.குழுக்கள் அமைத்து உங்களது தேவைகளைப் பற்றி விவாதியுங்கள் அல்லது அரசு சார்பற்ற அமைப்புகளின் பிராச்சரங்களில் பங்கு uகொள்ளுங்கள் .

.உங்கள் இடத்திலுள்ள நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற பிரதிநிதியை kநேரில் கண்டு அல்லது கடித வாயிலாக உங்கள் தேவையைத் தெரிவியுங்கள் .

.மகளிர் ,குடும்ப ,சமுக மேம்பாடு அமைச்சு ,கல்வி அமைச்சு ,தகவல் அமைச்சுக்கும் ,பிரதம மந்திரி இலாகாவிர்க்கும் எழுதவும் .

செயல்படத் தீவிரப்படுத்துங்கள்

.ஜனநாயக ஆட்சியையும் பெண்களின் மனித உரிமைகளை அனுசரித்தளையும் அடிப்படையாகக் கொண்ட தகவல் சுதந்திர சட்டம் இயற்றுதல் .

.பள்ளி ,பல்கலைநிலையம் ,கல்லூரி ,பல்கலைகழகப் பாடத்திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணைத்தல் .

.அதிகமானப் பொறுப்பு உடமையும் ஒளிவுமறைவின்றியும் கொண்ட தகவல்கள் பொது மக்களை சென்றடைவதை உறுதி செய்ய ஒரு சக்தி வாய்ந்த கண்காணிப்பு முறையைக் கொண்டிருத்தல் .

.தகவல் பெறும் உரிமைகளையும் பேச்சு சுதந்திரத்தையும் அத்துமீறும் அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்தல் அல்லது கட்டுப்படுத்தும் சட்டத்தை மறு ஆய்வு செய்து திருத்தம் செய்தல் .

.பத்திரிக்கை ஆசிரியர் கொள்கைகளில் ஆண்/பெண் சமத்துவத்தை தூண்டும் ஒரு தகவல் சாதன வழிகாட்டி குறியீட்டை உருவாக்குதல் .அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் ஆண்/பெண் சமத்துவ பயிற்சியளித்தல். முடிவெடுக்கும் பதவிகளில் அதிகமான ஆண்/பெண் சமத்துவ உணர்வுள்ள பெண்களை முன்னேற்றுதல் .

.எல்லாத் துறைகளிலும் ஆண்/பெண் சமத்துவ ரீதியிலான புள்ளி விபரங்களை உறுதி செய்தல் .

.பொது வாழ்கையில் பிரஜைகளின் குறிப்பாக பெண்களின் பங்கெடுப்பை அனுமதிக்க ஜனநாயகமும் ஆண்/பெண் சமத்துவ உணர்வுள்ள ஆட்சி அமைப்பு முறையையும் செயல் முறையையும் உறுதி செய்தல் .

.அனைத்துலக மனித உரிமை ஒப்பந்தங்களை உறுதிபடுத்த ஏற்றுக்கொள்ளுதல்.












No comments:

Post a Comment